Gunasekaran Periasamy vaththiyar

Sunday, May 24, 2020

5. கோவின் நீல வண்ண ரோஜா - சிறுகதை

இருவரும் கைகளை கோர்த்தவாறு, அனைத்து கொண்டு தூங்கி போனார்கள். சில குற்றங்களுக்கு தண்டனை வேறு விதமாக இருக்க வேண்டும். அதாவது தற்காப்பிற்காக, திட்டமிடாத குற்றங்களுக்கு தண்டனை தர கூடாது. அதுவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு அவர்களே தண்டனை தர வேண்டும். 

மறுநாள் அதிகாலை பொழுது விடிந்து சூரியன் ஒளியை வீசியதுமே, எழுந்தான் தங்கையன்.  வீட்டுக்கு உள்ளே சென்றவனுக்கு ஓரே அதிர்ச்சி.  சூரி கத்தி இடையில் குத்தி, இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தான் வீரபாண்டி மில் மைனர். சூரி கத்தி அவனுடையது. தடியை எடுத்து அசைத்து பார்த்தான் தங்கையன். உயிர் இருப்பதற்கான எந்த  அறிகுறியும் இல்லை.  மல்லாந்து படுக்க வைத்து கத்தியை எடுத்தான். அதை ஒரு பையில் போட்டு வீட்டின் கூரையில் ஒளித்து வைத்தான். வீட்டின் கொல்லையில் குழி தோண்டி புதைத்தான். தானே வீர பாண்டியை கொன்றதாக எண்ணி , கொலையையும் மறைத்தான். வள்ளியும் பிரணிகாவும் காணாததை கண்டு, வீரபாண்டினுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக இருவரும் எங்கோ ஓடி மறைந்து கொண்டனார் என எண்ணினான், அவர்களை தேடினான். அவர்கள் இருவருக்கும் கொலை பற்றி தெரியாது என இருந்தான்.
 
பச்சை வாழியம்மன், அம்மாவின் குல தெய்வம். இங்கே வள்ளியுடன் பலமுறை வந்து இருக்கிறாள் பிரணிகா. அதுவும் அந்த பொட்டத்துத்தி புதர், மஞ்சள் பூ, அதன் விசிறி காய்கள் என இருவருக்கும் பிடித்தமான ஒன்று. கோவில்கள் ஊருக்கு கிழக்கே தான் இருக்க வேண்டும் எனும் கிராமிய விதிக்கு உட்பட்ட கோவில் அது. 21  பந்தி தெய்வங்கள் 63 சேனை தெய்வங்கள் என பச்சை வாழியம்மன் மிகவும் பெயர் பெற்ற தெய்வம். அந்த கோவிலில் யாரும் படுக்கக் கூடாது, அழக்கூடாது, ஆடு வெட்டலாம், கோழி வெட்ட கூடாது, பூசாரிகள் இல்லாமல் சாமி கும்பிடக் கூடாது,  பெண்கள் வரக்கூடாது என சொல்லி முடிக்க முடியாத கட்டளைகள். ஆனால் பராமரிக்கத்தான் ஆளில்லை. வண்ணப்பூச்சு இல்லாத, பசி படர்ந்து, வெயிலில் காய்ந்து, கவனிக்க ஆள் இல்லாத சிலையாக பச்சை வாழியம்மன் இருந்தாள். தமிழ்நாட்டின் குலதெய்வத்துக்கு இது தான் இன்றைய நிலவரம். 

பொட்டத்துத்தி புதரில் இருந்த பிரணிகா தூங்கி கொண்டு இருந்தாள். காவல்துறை வாகனம் புழுதி பறக்க வருகிறது. அப்பொழுது, புதரில் இருந்த, பிரணிகா தரதரவென்று இழுத்து, காவல் துறை அதிகாரி ஒருவர்  வண்டியில் ஏற்றுகிறார். வண்டி மீண்டும் திரும்பி வேகம் எடுத்து செல்கிறது. அப்போது, புதிரின் ஓரத்தில் இருந்து வள்ளி வேடிக்கை பார்க்கிறாள். பிரணிகாவின் இத்தகைய கனவை கலைத்து பிரணிகாவை எழுப்பினாள் வள்ளி. எழுந்த வேகத்தில் பயந்து போனாள் .
"அக்கா நான் தான் அக்கா வள்ளி...........பயப்படாத...." என்றாக வள்ளி.
பிரணிகாவுக்கு மேல் மூச்சு, கீழ் முச்சு வாங்கியது. தாங்க முடியாத வயிறு வலி வந்தது. உடல் வேர்த்து கலகலத்து போனாள். தலை சுற்று வேறு. வயிற்றில் இருகையும் வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டு குத்தவைத்தாள். ஆடை முழுவதும் இரத்தம். வள்ளி ஒன்றும் புரியதவலாய் "அக்கா என்ன ஆச்சு " என்றாள் பிரணிகாவிடம்.  வள்ளி புதரின் வெளியே பார்த்தாள். அங்கே ஒருவர் வருவதை கண்டு " அண்ணே இங்க வாங்க அக்காவுக்கு வயிறு வலிக்குதாம்" என்று கத்தினாள். அவர் யார் என்றால் கோயிலில் குறி சொல்லும் பொன்மணத்தான் கோடாங்கி. கோடாங்கி துத்தி செடியை விளக்கி பார்த்தான். அங்கே பிரணிகா குத்தவைத்து வயிறை பிடித்திருந்தாள். கோடாங்கி அவள் பின்னே பார்த்ததும் புரிந்து கொண்டார். அப்போது,  தங்கையனும் அங்கு வந்து சேர்ந்தான். நடந்த விவரத்தை தங்கையனிடம் கூறி மாட்டு வண்டியை எடுத்துவரச் சொன்னான். 
 




Monday, May 18, 2020

4. கோ வின் நீல வண்ண ரோஜா - சிறுகதை



வேலைக்காரி இரண்டு நீல வண்ண மது பாட்டிலுடன் வந்தாள். மேசை மீது மெதுவாக வைத்தவள் கோகிலாவை பார்த்தாள். தான் கிளம்புவதாக கண் சிமிட்டினாள். நேர் நெத்தியில் வகிடோடு குங்குமத்தில் வரைந்து இருந்த கோட்டை பார்த்தவாரு கோகிலா கேட்டாள்.

"உன் புருஷன் என்ன செய்றான்"
" அவர் ஓடி  போய்ட்டாரும்மா...." என்றாள் வேலைக்காரி 
"பொட்டு வைச்சுருக்க"
"வருவாருனு நம்பிக்கையில வச்சுருக்கேன் ம்மா "
"அவன் இறந்துட்டான். பல வருசம் அச்சு. சரிய. 
இந் தா இந்த பணத்த வச்சுக்கோ" என்ற கோகி பணத்தை கத்தையாக எடுத்து கண்ணாடி மேசை மீது எரிந்தாள்.
பணத்தையும் அவளையும் மாறி மாறி பார்தவள், தன் குரலை சற்று உயர்த்தி சத்தமாக கூறினாள்.
" எனக்கு பணம் வேண்டாம் "
கோகிலாவின் தலையில் இருந்த காய்ந்த நீல வண்ண ரோஜாவை எடுத்து பார்த்தவாரு "வேற என்ன வேணும்" என்றாள்.
" நான் கிளம்புறேன் அம்மா"
" நீ எங்க பிறந்த" என்று இடை மறித்தாள் கோ.
அடுத்த நொடி தலை குனிந்தவள், விசும்பலும் அழுகையுமாக தேம்பினாள். 

"நான் சொல்லடும்மா வள்ளி. உங்க அப்பன் முத்தையன் பிறந்த பண்ணப்பாடி" என்ற கோகிலாவின் கண்ணிலும் கண்ணீர் துளிர்கள் வெள்ளமாக கரை புரண்டது. "எங்க உன் அப்பன்?"
பேசும் சக்தி வள்ளியிடம் அதிகமாகவே  இருந்தது. ஆனாலும், பயம் பதட்டம் என அனைத்தும் மௌனத்தையே நாடியது.
"உங்க அப்பன் என்னைய கூட்டிட்டு போய் கூட்டி கொடுக்க பாத்தன். தெரியுமா?. நான் வயசுக்குக்கூட வரல" அதான் அந்த மில் மைனார கொலை பண்ணி முத்தையன் பேர்ல போட்டேன். தெரியுமா?"
எல்லாவற்றையும் விட, கோவுக்கு தெரியாமல் பத்து வருடமாக இருந்த தம்மை, எப்படி கண்டுபிடித்தாள் என்பதையே வள்ளி எண்ணினாள்.

தன் இடுப்பு அரையண் கயிறில் இருந்த சிறு ஊசியை எடுத்த கோ, எடுத்த வேகத்தில் வள்ளியின் கையில் குத்தினாள். பஞ்சு போன்ற கையில குத்திய அடுத்த நொடி சரிந்தாள் வள்ளி. வள்ளி உடல் இமைக்கும் நேரத்தில் நீலம் பாய்ந்தது. கண்ணீரும் சிரிப்புமாக தன் குரலை வளைத்து வெங்கல மணி ஒசையை எழுப்பினாள் கோகிலா.
" கருப்பு..........." என்று.....
ஒரு அஜகுஜபகுவான கருப்பு பயில்வான் ஒருவன் வந்து நின்றான்.
"கருப்பு வடக்கு முலையில புதை, மேல நீல வண்ண பூ. நாலு நாளைக்கு ஆட்டு இரத்தம் ஊத்து........போ." என்ற வார்த்தையை கேட்ட கருப்பன் ஒரு தூண்டை தூக்கி தோளில் போடுவது போல் வள்ளியை வாரி எடுத்து தோளில் போர்த்திக் கொண்டான். வள்ளியின் மறைக்க வேண்டிய அங்கங்கள் தெளிவாக தெரிந்தது. அதை கோகிலா பார்த்தபடியே, கண்ணீரை துடைத்து கொண்டு, அந்த அறை முழுவதும்
ஒலிக்குமாறு சிரிக்க தொடங்கினாள்.

தொலைபேசியை எடுத்து எண்களை பிடித்து சூழற்றினாள். அது வக்கில் சந்திரன் போனுக்கு போனது. ஆனால், சந்திரனின் ஜூனியர் பல்லவன் எடுத்தான்.
" அம்மா சொல்லுங்கம்மா" என்றான்.
" சந்திரன் எங்க?" என்று கேட்டவள் பேனாவை திறந்தாள்.
எதிரே பேசிய பல்லவன், ஒவ்வொரு எண்ணாக கூறினான்.
அடுத்த அரைமணி நேரத்தில் சந்திரன் வீட்டுக்கு வருவதாக கூறினார். காலையில் கோட்டைக்கு இங்கிருந்து கிளம்பி அப்படியே நீதிமன்றத்திற்கு செல்வதாக திட்டம். இந்த உலகம் மீதான கோபம், கோவுக்கு அடங்க வில்லை. நாம் நினைத்தது நடக்காமல் போனால் பணம் அதிகாரம் எது இருந்தாலும் பயன் இல்லை. அப்போதும் கூட தன்னால் முடியாது என்று மனம் ஏற்க்காது. இது உண்மை என்றாலும் தன் மீதான நம்பிக்கையை பலரும் தவறாகவே வைத்திருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் கோவின் வாழ்க்கையில் பலமறை நடந்தது தான்.

அன்றும் ஒரு சம்பவம். தங்கையன் வீட்டுக்கு வந்து இந்த நாளோடு நாற்பது நாள் ஆகி இருந்தது. பகல் முழுவதும் விளையாடிய அசதியில் வீட்டு திண்ணையில் படுத்திருந்தாள் பிரணிகா. அதிகமாக குடித்த தங்கையன் நிலை தடுமாறி திண்ணையில் வீழ்ந்தான். தன்மீது விழுந்த தங்கையனை வேகமாக தூக்கி திண்ணையில் படுக்க வைத்து விட்டு உள்ளே சென்றாள். வழக்கம்போல் இன்றும் உணவு இருக்காது என எண்ணி, தண்ணீரை குடித்து விட்டு, படுத்துக்கொண்டாள். அம்மாவாசை இரவு. நிலவற்ற வானம் எங்கும் இருளை சுமந்து இருந்தது. எங்கோ ஒருவன் வயலை காத்துக்கிட்டு ஆலோலம் பாடிக் கொண்டு இருந்தான். சூறைக் காற்றுக்கு சற்றே குறைந்த அளவில் காற்று வீசியது. காற்று பட்டு மரங்கள் ஆடிக் கொண்டிருக்க, வில்லு வண்டியில் மில் மைனர் வரும் சத்தம் கேட்டது. வீரபாண்டி மைனர் வந்த ஊரே மல்லிகையும் அத்தாரும் மணக்கும். அப்படி ஒரு வாசனை. அந்த எண்ணம் இல்லாதவனையும் அந்த எண்ணம் வருமாறு மயக்கும். வில்லு வண்டியில் இருந்து இறங்கியதும் நேராக தங்கையன் வீட்டுக்குள் நுழைந்தான். திண்ணையில் படுத்திருந்த தங்கையனை மில் மைனர் பார்த்ததாக தெரியவில்லை. சுவர் ஓரம் சுருண்டு ஒருக்காலித்து படுத்திருந்தாள் பிரணிகா. அவள் அங்கம் முழுவதும் அவன் பார்வை ஓடி, அவள் முகத்தில் நின்றது. அழகுக்கு பஞ்சம் வைக்காத கடவுள் அவள் வாழ்க்கையை இப்படிய பண்ண வேண்டும் என்பது போல் இருந்தது. மண்டியிட்டு அமர்ந்து முகத்தின் மீது முத்தத்தை பதித்தான் வீீீரபாண்டி. அடுத்தக்கணம் வீரிட்டு எழுந்தாள் பிரணிகா. வள்ளியும் எழுந்தவள் நடக்க போகும் விபரீதம் பயந்து ஓடி மறைந்தாள். மில் மைனர்  பிரணிகாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொணடான். உடம்பில் வலு குறைந்த பிரணிகாவால் எதிர்க்க முடியவில்லை.  காட்டையே வேட்டும் கோடாலி சிறியது என்றாலும் அதைக்கூட தூக்க முடியாத நிலை. தன் பலத்தைக் கொண்டு எதிர்க்க முடியாதவன் அடங்கியே ஆக வேண்டும்.  இதுவே நியதியாகிவிட்டது. சூரி கத்தி ஒன்று இடையில் இருந்தது ஞாபகம் வந்தது. தன்னிலையை எந்த நிலையிலும் மாறவாமல் இருந்தாலே வெற்றி சாத்தியமாகும். தன் சக்தியை ஒன்று திரட்டி மைனரை தள்ளினாள். அடுத்த நொடி கத்தியை எடுத்து தன் இரு கைகளிலும் கெட்டியாக பிடித்து கொண்டாள் பிரணிகா. அவனோ அவள் தேகம் மீது தேய்ப்பதாக நினைத்து கொண்டு கத்தியோடு உறவாடிக் கொண்டான். விளைவு சூரி கத்தி அவன் வயிற்றை குத்தி கிழித்தது. மில் மைனர் உயிர் துடிக்க தொடங்கியது. மைனர் போதையில் அலறினான். அவன் அலறலுக்கு எதிர் அலறலாக தங்கையன் புலம்பினான். இது வாடிக்கையென அக்கம் பக்கத்தினார் கண்டுகொள்ளாமல் படுத்து கொண்டனார். பிரணிகாவுக்கு இரத்தத்தை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வள்ளியின் நினைவு வர ஊரை விட்டே ஓடி, ஊருக்க வெளியே இருந்த பச்சை வாழியம்மன் கோவிலின் திருவாச்சியம் இருந்த மூலையில் இருக்கும் பொட்டத்துத்தி புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டாள் பிரணிகா. அங்கு வள்ளியும் இருந்தாள். தங்கையன் மாமாவும் மில் மைனரும் சண்டை ஈடுவதாக கூறினாள் பிரணிகா. இருவரும் கைகளை கோர்த்தவாறு, அனைத்து கொண்டு தூங்கி போனார்கள். சில குற்றங்களுக்கு தண்டனை வேறு விதமாக இருக்க வேண்டும். அதாவது தற்காப்பிற்காக, திட்டமிடாத குற்றங்களுக்கு தண்டனை தர கூடாது. அதுவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு அவர்களே தண்டனை தர வேண்டும். 


தொடரும்

Sunday, May 10, 2020

3. கோ வின் நீல வண்ண ரோஜா - சிறுகதை


தலைக்கு ஏறிய போதையிலும் இரத்த வாசனை எட்டியது. தன்னை எதிர்த்தவர்களின் ஒவ்வொருவரின் ரத்தத்தின் வாசனையை கோ வின் மூளை 
பதிவு செய்து இருந்தது. இந்த இரத்தம் யாருடையது என யோசிக்க தன் நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

நீல வண்ண பட்டாம்பூச்சி ஒன்று சிறகை விரித்து பறப்பதை பார்த்த பிரணவிகா, அதை பிடித்துவிட மிக சிரத்தை எடுத்தாள். மனிதர்களின் ஆசைக்கு வண்ணமே முதல் காரணமாக இருக்கலாம். இந்த உலகில் மனிதனுக்கு பார்வை இல்லாமல் போனால் ஆசை ஒழிய வாய்ப்பு இருக்கிறது. இந்த நினைப்பே பெரிய ஆசைதான். நீல வண்ண பட்டாம்பூச்சி கைக்கு சிக்குவதாக இல்லை. நிறைவேறாத ஆசையால் மனம் துடித்து போனாள் பிரணவிகா. தனது நண்பியும் எதிரியுமான தோழி வேதா அவளை மிக சிக்கிரமாக வருமாறு அழைத்தாள். வேதாவின் முகம் மிக கலவரமாக இருந்தது. உடனே என்ன? என வினாவ செல்லுகையில் அவள் ஓடி மறைந்தாள். தன் அம்மா ராணி தான் அழைத்திருப்பாள் என எண்ணி, மொதுவாக சென்றாள். தன் வீட்டின் முன்பு மிகப் பெரிய கூட்டம் ஒன்று இருந்தது. கூட்டத்தைப் பார்த்ததும் சற்று பயந்து போனாள். காவல்துறையின் வாகனம் ஒன்று வேகமாக வருவதை பார்த்தவள் அது தனது வீட்டுக்குத் தான் வருகிறது என்று யூகித்துக் கொண்டாள். கூட்டத்தை விலக்கி வீட்டின் உள்ளே சென்றவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.  வீடெல்லாம் இரத்தம் தன் தந்தை பிணமாக கிடந்தார். உடம்பெல்லாம் இரத்தம்.

 'ராணியம்மா' "ராணியம்மா".................

பித்துபிடித்தவள் போல் சரிந்து கிடந்தாள்.கையில் சூரி கத்தி. அப்பாவின் கழுத்து அறுப்பட்டு மெத்தையில் கிடந்தார். துளசி மடம் மீது வந்தமர்ந்த நீலவண்ண பட்டாம்பூச்சி அதன் மீது படிந்த ரத்தக்கரையால் பறக்க முடியாமல் சிரமப்பட்டது. இப்பொழுது பிடித்தால் எளிதாக பிடித்து விடலாம். சில சமயம் இப்படித்தான் இருக்கும். எதையோ தேடி கிடைக்கமால் மனம் வருந்தும் நாம், அது கிடைக்கும் துயரத்தில் இருந்தும்  கூட அடைய முடியாமல் போகும். இன்றைய காலகட்டத்தில் இது சர்வ சாதாரணமாகி போய்விட்ட ஒரு நிதர்சனமான உண்மை. காவல்துறை அதிகாரி ஒருவர் பூட்ஸ் காலோடு உள்ளே வந்தார். ராணியம்மாவை அழைத்துக் கொண்டு சென்றார். ராணியம்மா என்று சத்தமாக கதற வேண்டும் என்பது போல் இருந்தது. வேதாவின் அம்மா பங்கஜம் பிரணவிகாவை தூக்கிக் கொண்டாள். 

பெரிய வீடு, யாரும் இல்லை,  அவ்வப்போது சாப்பாடு தந்த பங்கஜம் இன்று வரவில்லை. பத்து நாட்களுக்கு மேலாக பிரணவிகா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பசி , தாகம், பயம் இவையெல்லாம் விட சொல்ல முடியாத பல வலிகள். தனது மாமா தங்கையன் வீட்டின் வாசலில் வந்தமர்தது
அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அவள் எழுந்து நடக்க முற்ப்பட்ட போது, அது முடியாமல் கீழே விழுந்தாள். வீட்டின் உள்ளே வர மனம் இல்லமால் வெளியே அமர்ந்தவன், அவள் கீழே விழுந்த நிலை கண்டு மனம் சஞ்சலப்பட்டான். தன் ஆடை விலகியதை கூட மறைக்க முடியாதவளாய் மயங்கினாள். தண்ணீர் தெளிக்க நீரை தேடியவன், அவளின் அங்கம் மறையாத இடங்களை கண் சிமிட்டாமல் பார்த்தவாறு சிலையாக நின்றான். பங்கஜம் வேகமாக வந்தவள், நீரை முகத்தில் தெளித்து, கன்னத்தில் அடித்தாள்.
உறங்கும் நிலையை விட மயக்க நிலை ஆபத்தானது உயிரையே எடுத்து விடும். இதையேல்லாம் விட பசி உயிர், மானம், மரியாதை, ஒழுக்கம் என எதையும் விட்டு வைக்காது. அவளுக்கு சுயநினைவு வரும்வரை அவளின் ஆடை அவளை போலே நிலைகுழைந்து இருந்தது.

உண்ட தெம்பு சற்று ஆறுதல் என்றாலும் தன் மாமா மீது சற்று பயம் வந்தது. பங்கஜம், மாமாவோடு தன்னை அனுப்பி விட்டால் என்ன செய்வது என்ற கலவரம்.

" வா பிராணி மாமா வீட்டுக்கு போகலாம்" என அழைத்தான் தங்கையன்.

"எல்லா சண்டையையும் மறந்து விடு தங்கைய, அவள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ" இத பாரு பிரணிகா ராணியம்மா வர வரைக்கும் மாமாக்கூட போ" என்றாள் பங்கஜம். அவள் சொல்லில் ஒரு கட்டளை இருந்தது. பங்கஜம் மெதுவாக தங்கையனிடம் " இத பாரு அவ வயசுக்கு வர மாதிரி இருக்க  பாத்துக்கோ" என்றாள்.
விருந்தும் மருந்தும் உறவினர் வீட்டில் மூன்று நாட்கள் தான்.  பக்கத்தில் வீட்டில் பத்து நாள் என்பது அதிகம் தான் என்றாலும் பிரணிகாவின் கவலை எல்லாம் மாமாவை நினைத்தே இருந்தது. கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனதில் ஆறாத வடு என்றால் கோபக்கொலைகள் வாழ்க்கையை புரட்டியே போட்டு விடும். மீண்டும் மீளவே முடியாது.

மாமாவின் பின்னே வீட்டை வீட்டு செல்லும் போது ராணியம்மா அழைப்பது போல் இருந்தது.

" கோ அம்மா கோ அம்மா கோ அம்மா "

கண் சிமிட்டி திரும்பி பார்த்த போது வேலைக்காரி நின்றிருந்தாள்.
'என்ன'
"வக்கில் சந்திரன் விபத்துல இறந்துட்டாருனு போலிஸ்க்கரார் ஒருத்தர் சொல்ல சொன்னாரு. அப்புறம நீங்க நாளைக்கு 10 மணிக்கு தயார இருக்கனுமுனு சொன்னாரு"
"அவன் எங்க"
"போய்ட்டாரும்மா"
"சரி நீ வீட்டுக்க போ. 2 பாட்டில் எடுத்து வைத்துட்டு போ"
"சரிம்மா"

தொடரும்

Saturday, May 9, 2020

2.கோ வின் நீலவண்ண ரோஜா - சிறுகதை

பகுதி 2 (((( பகுதி ஒன்றை படுபடிக்கவும்)))))




கருமையான வளர்ந்த மிக நீண்ட கூந்தல்.  அதிலே ஓர் நீல வண்ண ரோஜா. இதை அவளுக்கு தந்தவர் இன் மாநிலத்தின்  முதல்வர். 'ஆடல் கலை தெய்வம் தந்தது' என்பது உண்மையாகவே இருக்க வேண்டும்.  ஏனெனில் ஆடக் கற்கும் அனைவருமே எதிர்பார்க்கிறப்படி ஆடுவதில்லை.  கோ வின் ஆட்டத்திற்கு சிறந்த பரிசாக நீலவண்ண ரோஜா, அதுவும் முதல்வரின் கையால் உச்சி முகர்ந்து, பெரிய மேடையில் வாங்குவது என்பது சாதாரண  காரியம் இல்லை. நீலவண்ண ரோஜாவிடம் அரம்பித்த கதை இன்று வரை தன் அனைத்து சொத்துக்களுக்கு முதல்வரின் கைங்கரியம் தான். முடிச்சூடா மன்னராக இருந்த முதல்வர் தன் பினாமி சொத்துக்களுக்கு அவளைத்தான் நியமித்தார். அவரின் போகாத காலம் குண்டு அடிப்பட்டு இறந்து போனார். இதுவும் கோ வுக்கு சாதகமாகி விட்டது. அவருக்கு பின் கட்சி, ஆட்சி என எல்லாவற்றிலும் தலைவியானாள். இன் மாநிலத்தின் முதல்வராகவும் ஆனாள்.

தன் வந்த வழி தவறாக இருக்கலாம். அதற்காக மக்களுக்கு நல்லதே செய்வில்லை என்று கூறிவிட முடியாது. மக்களுக்கு நல்லதும் செய்திருக்கிறார். தன்னால் முடிந்த வரை மக்களுக்காகவே வாழ்ந்தார் என்பது சிறு உண்மை இருக்கிறது என்றாலும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்காக வாழ்ந்தார் என்பதே உண்மை. இன்று தன்னை சுற்றி இருந்தவர்கள்  துரோகியாக நீதிமன்றத்தில் இத்துகைய தீர்ப்பு.................

கோ வின் பார்வை முழுவதும் அங்கே சிதறிக்கிடந்த உப்பு கலந்த எலுமிச்சை மீது படர்ந்தது. அதை எடுத்த மறுகணமே மிகச்சிரியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவள் வாழ்க்கை போலவே இருள் சூழ்ந்து இருந்தது. கையில் எடுத்த உப்பு எலுமிச்சையை தன் செவ்விதழில் குவித்து, உறிஞ்சி, தன்னிலை மீண்டாள். போதை பேரின்பத்தில், கபலத்தின் நரம்புகள் புடைக்க, மூளை எரிமலை வெடிப்புக்கு பின் அமைதி பெறுவதை போல அமைதியானது. பல முனிவர்கள் தங்களை சிவனுடன் இணைக்க கஞ்சாவை புகைப்பது போல சிலர் தங்கள் துக்கங்களை குறைக்க மதுவை நாடுகின்றனார். ஆனால் அது உண்மையல்ல. போதை நினைவை இழக்க செய்து விடும். அதாவது, ஏதும் செய்ய முடியாத கோழையாக மாற்றிவிடும். 

சின்ன நீல வண்ண மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அந்த கண்ணாடி மேசை மீது வைத்தாள் வேலைக்காரி. அறையில் சிறு ஒளி படர்வதை கண்ட கோ வேலைக்காரியை பார்த்தாள். மருண்ட மண்டை கோலமாக வேலைக்காரி ஓடுவதற்கு தயாரானாள். கோ தன் கையை தூக்கி ஒருமுலம்  கட்டுவது போல மது பாட்டிலை எடுத்து வர சொன்னாள். உடைத்த அதே மாதிரியான நீலவண்ண மது பாட்டில் மேசை மீது வைத்தாள். கண்ணாடியின் ஒரு சில் வேலைக்காரியின் பாதத்தை பதம் பார்த்தது. அதை வெளியே காட்டாமல் ஒடி சென்றாள். இரத்தத்தின் வாசனை அந்த அறை முழுவதும் நிரம்பியது. தலைக்கு ஏறிய போதையிலும் இரத்த வாசனை எட்டியது. 
தொடரும்

இலவச சோதிடம் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம்

இலவச சோதிடம் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம்.........

Free astrology 



https://m.facebook.com/gunasekaran.periyasamy.33
 ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது ஒரு உயிர் பிறக்கும்போது இந்த உலகத்திற்கு எந்த வழியில் வருகிறது என்பதை குறிப்பதே லக்னம் ஆகும்.  அதாவது சுழலும் பூமிப்பந்தில் எந்த நேரத்தில் எந்த திசையிலிருந்து எந்த தேசத்திற்கு ஓர் உயிர் வருகிறது என்பதை குறிக்கும் ஓர் புள்ளியாகும். அதே நேரத்தில் மற்ற கிரகங்கள் எந்தெந்த நிலையில் இருந்தன என்பதையும் ராகு-கேது என்கின்ற வடதுருவம் தென்துருவம் எந்த நிலையில் இருந்தது என்பதையும் மற்ற கட்டங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. லக்னம் தொடக்கமாக கொள்ளப்படுவது இதனாலே............
 பூமி பயணிக்கும் வளிமண்டலத்தை சூரியனால் ஏற்படும் பருவகால மாற்றத்தை வைத்து 12 பாகங்களாகப் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திர மண்டலத்தில் எந்த மண்டலத்திற்கு கீழே பூமியும் சந்திரனும் பயணிக்கிறது என்பதை அறிய 27 நட்சத்திர மண்டலங்களை பிரித்து 12 ராசிகளுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது. இதன் மூலம் ஒருவர் பிறக்கும்போது அவர் எந்த நட்சத்திர மண்டலத்தின் கீழ் அவர் வந்தார் என்பதை அறிய முடிகிறது.  லக்னம் முதலாவது போல மற்ற பாகங்கள் இரண்டு மூன்று என 12 பாகங்களாகப் படுகிறது பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் நிலையையும் ஒவ்வொரு 12 பாகங்களாகப் பிரித்து தன்மையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.   லக்னம் முதல் 12 பாகம் வரை முறையில் உயிர் பிறத்தல் மழலை பருவம் சகோதரர்கள் அன்னை குழந்தை எதிரி மனைவி ஆயுள் புண்ணியம் கருமம் லாபம் கடைசியாக எந்த உலகத்திற்கு அடுத்து  செல்லவிருக்கிறேன் என்பதை கூறுகிறது.

சோதிடம் சம்பந்தமான உங்கள் மேலான சந்தேகங்களுக்கு இங்கே விளக்கம் தரப்படும். இது பயற்சி அடிப்படையில் நடைபறுவதால் இலவசமாக மட்டுமே அணுகவும்................
உங்கர் பெயர் பிறந்த ஊர் தேதி நேரம் குறிப்பிடவும். அழைக்கவும்  Whats up number  எட்டு ஒன்பது மூன்று ஒன்பது நான்கு இரண்டு பூஜ்ஜியம் மூன்று ஒன்று ஒன்று.

இது முற்றிலும் இலவச சேவை மற்றும் பயிற்சி பகுதி.

சோதிடர்
முசுவை பெரியன்
அவருடன் இணையும் உங்கள்
குணசேகரன் பெரியசாமி க

Wednesday, May 6, 2020

முசிறி அழகுநாச்சியம்மன் கோவில்

முசிறி அன்னை ஸ்ரீ அழகுநாச்சியாம்மன் வரலாறு
என் நாட்டிலும் நன்னாடாம் சோழ வள நாட்டில் முசுகுந்தாபுரி எனும் முசிறி  மாநகரின் கண் அகண்ட காவிரியின் வடக்கு கரையின் பரிசல் துறை நான்கு கரையில் அன்னை ஸ்ரீ அழகுநாச்சியம்மன் தன் ஆறு சகோதரிகள் உடன் சப்த கன்னிமார் தெய்வமாக, காணியாள காராளனுக்கு உட்பட்ட திருக்கோவிலில் எழுந்துதருளி உள்ளார்கள் . மாசி பெரியாண்டவர் முதன்மை தெய்வமாக இருக்கிறார்.
கோவில் தோற்றம்

அன்னை அழகுநாச்சியம்மன கோவில் அம்மையப்பன் காராளன் கல்வெெட்டு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு காணியாளப் பிள்ளையாகிய அம்மையப்ப காராளன் காவிரியில் நீராட சென்றுள்ளார்.  அப்பொழுது மேல் திசை மேற்கில் இருந்து நீரில் பேழை ஒன்று மிதந்து வருவதை பார்த்து அந்த பேழையில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆவல் கொண்டு அந்த பேழையை காராளன் எடுத்து திறந்து பார்த்த பொழுது மின்னல் ஓளிப்போல் மேல் நோக்கி சென்று வானில் அசாரீரி வாக்காக "நான் தான் அழகுநாச்சியம்மன். நான் மலையாள தேசத்தில்லிருந்து வந்திருக்கிறேன். வரும் வழியில் யாரும் என்னைப் பார்க்காத வண்ணம், நீயே எனது முதல் பிள்ளை என எண்ணி, உன்னை காக்க, நானே உனக்கு குலதெய்வமாக வந்து இருக்கிறேன். என்னை வணங்குவது உன் கடமை உன் குலத்தை காப்பது என் கடமை ஆகவே எனக்கு கோவில் அமைத்து பரிபாலனம் செய்வதாக காவேரி கரையை அடித்து சத்தியம் செய்" என்றதாம். அதை கேட்ட பயந்து நடுங்கி மெய் சிலிர்த்து மண்டியிட்டு ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிக் கரையை அடித்து சத்தியம் செய்தாராம். மேலும் அவர் அன்னையிடம் தாயே நீ கூறியபடி நான் சத்தியம் செய்துவிட்டேன், தாங்கள் கூறியபடி எமக்கு குலதெய்வமாக இருந்து காப்பது சத்தியமானால் என் கையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டும் என்றாரம். அருப சொருபியான அன்னை ஸ்ரீ அழகுநாச்சியம்மன் கையில் அடித்து அவ்வாறே சத்தியம் செய்ததாம். அதன் பிறகு அவ்விடத்தில் கோவில் அமைத்து அம்மையப்ப காராளன் வம்சவழியாக வழிபட்டு வந்ததாக வரலாறு.
பிரசித்தி பெற்ற தேவி அன்னை ஸ்ரீ அழகுநாச்சியம்மன் மற்றும் 21பந்தி பரிவார தெய்வங்களை பூஜித்துக்கொண்டும் பூர்வீக தொழிலான வேளான்மை செய்து கொண்டும் சகல ஐஸ்வர்யங்களுடன் காணியாளப்பிள்ளை என்ற பட்டத்துடன் முசிரியில் மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
அவ்வாறு இருக்கையில் கோவிலின் கிழக்கே பருவ மழை காலங்களில் இயற்கையின் சீற்றத்தால் அல்லிக்குழி என்ற இடத்தில் காவிரிக்கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதை சரி செய்யும் பொருட்டு பல முறை முயற்சித்தும் கரை உடைப்பை சரி செய்ய இயலவில்லை. இதனை சரி செய்யும் பொருட்டு ஊர் பெரியவர்கள் தெய்வத்தை வேண்டி கேட்டுக்கொண்டபோது சாமியாடிய பூசாரி அருள்வாக்காக கானியாளபிள்ளையின் பிள்ளையை காவு கொடுத்து கட்டினால் கரை நிற்கும் எனக் கூற ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கானியளப்பிள்ளை சம்மதித்தார் பிறகு தனது குழந்தையை காவு கொடுக்க விரும்பாமல் இரவோடு இரவாக ஊரை விட்டு வெளியேறினார் அவ்வாறு செல்கையில் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தனது 3 வயது பெண் பிள்ளையான பொன்மருதாய்யம்மாள் மறதியாக விட்டு சென்றனர். மறுநாள் காலையில் கூடிய ஊர் பெரியவர்கள் காவிரிக்கரையில் உடைப்பு ஏற்பட்ட அல்லிக்குழியில் அக்குழந்தையை கொண்டு தெய்வ வாக்கினை நிறைவேற்றினர். இது அடி18ம் நாள் நடந்ததாகவும், அந்த குழந்தை மீது மண் போட்ட போது அப்பா கண் என்றதாகவும், ஒவ்வொரு அடி 18க்கும் அல்லி குழியில் கண் என கேட்கிறது...............
முசிறி தெய்வம் தேவி அன்னை ஸ்ரீ அழகுநாச்சியம்மன், மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ தன்னாசி பீடம், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ காத்தவராயர், ஸ்ரீ மதுரைவீரசுவாமி, ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ ஆதி பிடாரி அழகுநாச்சியம்மன்,  சப்த கன்னிமார் அம்மன் ஆகிய தெய்வங்களின் அருளோடு வாழ்ந்து கொண்டு வந்தார்கள்,  மேலே சொன்ன சங்கதிகள் அனைத்தும் ஓலைசுவடிகள் வாயிலாக அறியப்பட்டவை.
வேண்டியவர்க்கு வேண்டிய வரத்தை அருளும் தேவி ஸ்ரீ அன்னை அழகுநாச்சியம்மன் வணங்கும் பக்தர்கள் முசிறி மட்டுமில்லாமல் திருச்சி, நாமக்கல், கரூர், குளித்தலை, சேலம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பல மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் குல தெய்வமாக வேண்டி வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.
இச்சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் புதிய நூதன இராஜகோபுரம் சிற்ப சாஸ்திர முறைப்படி நிர்மானிக்கப்பட்டு சுதை வேலைகள் யாவும் சிறந்த சிற்ப வேலைப்பாட்டுடன் நிகழ்வுற்று, புதிய முகப்பு மண்டபம் மற்றும் திருமதில் சுவர் திருப்பணிகள் யாவும் வியக்கதகு வண்ணம் நிறைவுற்று ஸ்வஸ்திஸ்ஸ்ரீ நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 14ஆம் நாள் ([[1]]) திங்கட்கிழமை ஏகாதசி திதி, புனர்பூச நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சுப லக்கினத்தில் மஹா கும்பாபிஷேகம் வேத் சிவகாம முறைப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோவில் முன்று மந்து 84 ஊர்கரார்களில் பூசாரிப்பட்டி மந்தைக்கராரகிய காணியாள அம்மையப்ப காராளன்  ( சோழிய வேளாளர் )வம்ச வழிக்கு பாத்திப்பட்பதாக இருக்கிறது.http://gunasekaranperiasamyka.blogspot.com

Tuesday, September 10, 2019

1.கோ வின் நீலவண்ண ரோஜா - சிறுகதை



ஆலமர விழுதுகளை போல் படர்ந்து விரிந்திருந்த சவுக்குத் தோப்பு. அதன் மத்தியில் நீல வண்ணம் பூசிய மாளிகை. மாளிகையின் உள்ளே நீல விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் ஏதோ ஒரு பயம் பார்த்தவுடனே தொற்றிக் கொண்டது. தலைவாசலில் மிகப்பெரிய ஒரு சந்தன மரத்தால் ஆன  கதவு.  அந்த கதவு இருந்த அறையின் உள்ளே ஒரு மிகப்பெரிய கண்ணாடி மேஜையில் ஒரு வெளிநாட்டு மதுபானம் இருந்தது. அதன் அருகிலே ஒரு கண்ணாடி குவளையில் அருந்தி மீதம் வைத்த நீல வண்ண மது, ஸ்டப்பரி ஐஸ்கட்டியுடன் இருந்தது. ஒரு தட்டில் எலுமிச்சை மற்றும்  உப்பு சிதறிக்கிடந்தது. ஒரு நாற்காலியில் இளம்பெண் கோகிலா என்ற கோ சாய்ந்து கிடந்தாள்.

இரவு நேரம்-8 ஐ தொட்டது.
 வினாடி முள் நிமிட முள் இரண்டும் நேரத்தை துரத்திக் கொண்டு இருந்தது . தனிமையில் இருப்பவர்கள் மணியை பார்த்த வண்ணமே இருந்தால் அது பயணிக்கும் தூரம் மிக நொடியது கொடியதும் கூட.  நீண்ட அமைதியைக் கலைக்கும் வண்ணமாக தொலைபேசி ஒன்று அலறியது. பணிப்பெண் உறவாய் வேகமாக வந்து தொலைபேசியை எடுத்தாள். மறுமுனையில் ஒரு மென்மையான குரல் அவள் காதுகளை செவிடாக்கும் வண்ணம் "கோ" என்று அழைத்தது.

வேலைக்காரி " அம்மா தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் " என்றாள். மறுமுனையில் அந்த ஆண் " அம்மாக்கிட்ட குடு" என்றான்.

நிசப்தங்கள் சிறு ஒசைக்கே தாங்காது. இந்த ஆண் குரலுக்கு எப்படி அமைதி காக்கும்.
தன் முகத்தின் மீது இருந்த கையை எடுத்த கோ மின் விளக்கு ஒலியை தாங்க முடியாமல் முகம் சுளித்தாள்.

" அம்மா வக்கில் சந்திரன் பேசுறரு" வேலைக்காரி
"ம்ம்ம்ம்ம"
அலைபேசியை கையில் வாங்கி 'ம்ம்ம்ம்ம' என்றாள்.
வக்கில் "கோர்ட்டுல உங்களுக்கு இரட்டை அயுள் போட்டங்கம்மா...."
அடுத்த காணம் காளியின் மறுவுருவம் கொண்ட கோ அலைபேசியை எடுத்து உடைத்து எறிந்தாள்.
வேலைக்காரிக்கு பிடித்த ஒட்டம் திரும்பிக் கூடப் பார்க்க முடியவில்லை.

நீல வண்ண மது பாட்டிலில் இருந்த மது முழுவதையும் எடுத்து பருகி, வெறும் பாட்டிலையும் உடைத்து எறிந்தாள். அவள் கண் முன்னே வாழ்க்கையில் நடந்த எத்தனையோ காட்சிகள் மின்னல்  வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அசுர வேகத்தின் இடையே சட்டென நின்ற ஒரு காட்சி அவளை நிலைக் குழையச் செய்தது.

கருமையான வளர்ந்த மிக நீண்ட கூந்தல்.  அதிலே ஓர் நீல வண்ண ரோஜா. இதை அவளுக்கு தந்தவர் இன் மாநிலத்தின்  முதல்வர். 'ஆடல் கலை தெய்வம் தந்தது' என்பது உண்மையாகவே இருக்க வேண்டும்.  ஏனெனில் ஆடக் கற்கும் அனைவருமே எதிர்பார்க்கிறப்படி ஆடுவதில்லை. கோ வின் ஆட்டத்திற்கு சிறந்த பரிசாக நீலவண்ண ரோஜா, அதுவும் முதல்வரின் கையால் உச்சி முகர்ந்து, பெரிய மேடையில் வாங்குவது என்பது சாதாரண  காரியம் இல்லை. நீலவண்ண ரோஜாவிடம் அரம்பித்த கதை இன்று வரை...    ..........    .... தொடரும்


Monday, September 9, 2019

பிறப்பறிந்தவன்

பிறவி அறியாதோரு பேரு பெற்று,
கடன் அறுக்கா வழியற்று,
 உள்ளம் உழன்று,
துன்பம் மேல் தூக்கி,
கடந்து செல்லும் வழிப்போக்கனை போல், நானும் இருப்பேன் என்று நினைத்தாயோ !!!
 மாசறப் பிறந்த காராளன் வம்சத்தின் உதிரம் உதிர்த்த ஒரு துளி ஆனாலும், ஆலமரத்தின் விதை போல் ஒரு விருட்சத்தை உள்ளே தாங்கி வீழ்கின்றேன்............................
விடை ஈடும் கேள்விகள் மனத்தினுள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது.........
பிஞ்சிலேயே பழுத்த பழமும்
 காலம் கடந்து கனிந்த பழமும் சுவை தராது, காலத்தே பயிர் செய்த உள்ளீடற்ற வெளிப்படையான செயலை செய்து வாழகிறவன் நான்......

Thursday, August 15, 2019

மதுரைவீரன் கதைப்பாடல்; முசிறி பகுதி


காராளும் வம்சமிது
பச்சைத் தண்ணீரில் விளக்கு எரியும்
நரி குருவி நாடாது
மூன்று தாளத்தையும் முறையாக கொண்டுவந்து பாடுகிறேன்.............

பொம்மியை சிறை எடுத்த வீரயன், திருச்சி நாயக்கரின் அன்பைப் பெற்று, படைத் தளபதியாய், பொம்மியை மணமுடித்து, மகிழ்ச்சியாய் இருக்கையில், மதுரை மன்னனிடமிருந்து ஒரு அவசர செய்தி வருகிறது............

"மதுரையை  கள்ளர்கள் சூழ்ந்தனர்
உதவி. - பாண்டிய மன்னன்"

செய்தியைப் படித்த மறுகணமே நாயக்கரின் மனதில் உதித்தவர், வீரயன் . உடனே வீரயனை அழைத்து மதுரைக்குச் செல்லுமாறு பணிந்தார். மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி வீரயனும் பொம்மியும் மதுரைக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

கள்ளர் கருவறுக்க மதுரைக்கு வீரயன் புறப்பாடு...........
காராளன் ஆளும் மேகம் கருத்திருக்கு,
வீரன் விதி சூழ்ச்சி செய்திருக்க,
மதுரைக்கு வேண்டாமென தென்றல்  புயலடிக்க, வெண்புரவி மீதேறி, பொம்மியை பின் அமர்த்தி வீரயன் புறப்பாடு..........

எக்காளம், கொம்பு, சங்கு, சலங்கை, சேமக்கலம், கவுரி, கொக்கறை, கொடுகொட்டி, மத்தாளம், நாயின தாளம், நாட்டு தாளம், வாங்கா, கர்ணா, டக்கா, தவண்டை, தப்பறை, துத்தி, பேரிகை, பஞ்சமுக வாத்தியம், வீரமுரசு, சிறு முரசு யென 21 வாத்தியங்கள் முழங்க...........

வீரயனுக்கு பின்னே 5000 படை சேனை, உணவு, உடை, தாதியர், மருத்துவச்சி, பணியாள் யென ஆறு வகை பரிவாரங்களுடன், கூர்வாள், வில்லம்பு, வேல் கம்பு, கேடயம், இடைச்சூரி யென போர்க்கருவிகள் தாங்கி,
தலையிலே மகுடம், நெற்றியிலே திலகம், கழுத்திலே மணி, இடுப்பிலே இருகக்கட்டிய கச்சை, இடக்கையில் மது, வலக்கையில் வீச்சருவாளென நெஞ்சை நேர் நிமிர்த்தி, கண்ணில் அனல் பறக்க, அண்டம் கிடுகிடுங்க, ஆகாயம் நடுங்கிட, இடக்காலை முன்னே வைத்து , வலக்கையால் வாள் எடுத்து வீசினான் மதுரை வீரன்.............

பொம்மியரும் வீரையனும் புரவி தான்யேறி
மதுரை மாநகருக்கு சீக்கிரமாய் போகையிலே
முசிறி தன்னில் இளைப்பாரிட, காணியாளனும் கொத்துக்கார கவுண்டனும் - வீரையனை
என்னவென்று என்று இதமாய் கேட்டனர்.
வீரனும் உரைத்திட்டான், தன்கதை இதுவென
மதுரை சூழ் கள்ளரை வேரறுக்க புறப்பட்டேன் என்றான்.........

வீரயன் சேதி கேட்டு, முசிறி வாழ் மக்கள் விண்ணப்பித்தனர்.
எங்களையும் காத்திட அருள் செய்வாய் யென
நான்கு கரை தன்னில் முசிறி அழகாயி முன்னே அமர்ந்து எடுத்துரைத்தான்.
நீங்கள் செல்லும் முன்னே முன்னோடி தடை நீக்கி காப்பேன் யென
காவிரி நீரை வார்த்து சாத்தியம் சொன்னான்..........
இது இன்றும் உள்ளது நம் அறிவோம்....

நமக்கு என்றும் மதுரைவீரன் துணை இருப்பான்.........

இப்படிக்கு
உங்கள் குணசேகரன் பெரியசாமி க

தோப்பாகும் தனி மரங்கள்

தன் பிறப்பை அறியாதோரு பேறு
பெற்ற தனி மரங்கள், தாய்க்கு விளக்கம் கேட்பதால் அனாதை என்பீரோ....?

 புறம் ஒளிர அகம் மறந்து கள்ள புணர்வுக்கு அடிமையாகி, குழந்தை யை குப்பைத்தொட்டியில் வீசும் கழிசடைக்கு
பத்து ரூபாய்க்கு ஆணுறை வாங்க பணம் இல்லையா?






21 பந்தி தெய்வங்கள் துதி

கந்தனுக்கு முன் பிறந்த வேழமுக நாயகன் விநாயகனுக்கு முதல் வணக்கம்..................

21 பந்தி 61 சேனைகள் விளக்கம்: தென் மாவட்டங்களில் இந்த வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.21 பந்தி என்பது ஒரு கோவிலில் இருக்கும் 21 தெய்வங்களை குறிக்கும்.61 சேனைகள் என்பதும் தெய்வங்கள் தான்.இந்த வழிபாடு 3 வகை உள்ளது.ஒன்று குருநாதன் பந்தி, இரண்டாவது ஐயனார் பந்தி, மூன்றாவது கருப்பணசாமி பந்தி ஆகும். 21 பரிவார தெய்வங்களின் பட்டியல் :- 1. கழுவநாதன் 2. விருமாண்டி (ஸ்ரீ பிரம்மன்) 3. மாயன் (ஸ்ரீ மஹா விஷ்ணு) 4. காத்தவராயன் (கழுமரம்) 5. அக்னி வீரபத்திரன் 6. லாட சன்னாசி 7. மதுரை வீரன் 8. வெள்ளையம்மாள் 9. பொம்மியம்மாள் 10. இருளன் 11. இருளாயி அம்மன் 12. பெரியாச்சி அம்மன் (பேச்சியம்மன்) 13. இராக்காயி அம்மன் 14. கருப்பாயி அம்மன் 15. வாங்கருப்பன் 16. பூங்கருப்பன் 17. மதுரை பெருங்கருப்பன் 18. சங்கிலி கருப்பன் 19. ஆகாய கருப்பன் 20. சந்தன கருப்பன் 21. சமய கருப்பன் குருநாதன் பந்தி : குருநாதன் பந்தி என்பது சிவனார் பந்தி அவரே தலைவர்.21தெய்வங்களின் தலைமை அங்காள ஈஸ்வரி அம்மன்.. இந்த குருநாதன் பந்தி அதிகம் திருநெல்வேலி பகுதியில் சிறப்பு வாய்ந்தது.அனைத்து பந்திகளிலும் ஒரு தெய்வம் இருக்கும்.அவர் தான் பேச்சி அம்மன்.இவர் காளி அவதாரம். காளியம்மன் ஒருசில பந்திகளில் இருப்பார். ஆனாலும் பேச்சி அம்மன் அனைத்து பந்திகளிலும் இருப்பார். குருநாதன் பந்தியில் முறையே கருப்பணசாமி, சுடலை மாடன், பைரவர், இருளப்பன், லாடசன்னாசி,ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் முறையே தலைமையாக இருப்பார்கள். அனைத்து பந்திகளிலும் 61சேனை தெய்வங்கள் மாறாது. 21 பந்திகள் மாறுபடும்.அவர்களின் தலைமை மாறுபடும். ஐயனார் பந்தி : இந்த பந்திக்கு ஐயனார், பூரணம், பொற்களை தான் தலைவர்.இந்த ஐயனார் பந்தியில் தலைமை பீடம் ஒவ்வொரு ஐயனார் பந்திக்கும் மாறுபடும்.குறிப்பாக காரையார் சொரிமுத்து ஐயனார் பந்தியில் சங்கிலி பூதத்தார் தான் தலைமை.பிறகு கருப்பணசாமி.சங்கிலி கருப்பசாமிக்கு சின்ன கருப்பன், முத்து கருப்பன் என துணை இருப்பர். ஐயனார்க்கு லாடசன்னாசி,அக்கினி வீரபத்திரன் துணை இருப்பர். சோணையாக்கு இருளப்பன், முனியாண்டி துணை இருப்பர். கருப்பணசாமி பந்தி : கருப்பசாமி பந்தியில் கருப்பன் தான் தலைவர். தலைமை ஒவ்வொரு கருப்பசாமி கோவிலுக்கு ஏற்ற மாறி மாறுபடும்.அதிகமாக இருளாயி, ராக்காயி அம்மன் தலைமையாக இருப்பர். கருப்பணசாமி பந்தி பற்றி பெரும்பாலும் அனைவருக்கும் தெரிவதில்லை. கருப்பசாமி பந்தியில் ஐயனார் இருக்கமாட்டார்.ஏன்னெனில் ஐயனார் அனைவருக்கும் தலைமை தெய்வம். அதனால் 21 தெய்வங்களாக வரமாட்டார். அதிகமான கருப்பசாமி கோவிலில் இருளாயி தான் தலைமை.18ம் படி கருப்பன், சங்கிலி கருப்பன் பந்தியில் ராக்காயி அம்மன் தலைமை. சங்கிலி கருப்பன் பந்தியில் சில இடங்களில் சீலைக்காரி அம்மன் தலைமையாக இருப்பார்.சீலைகாரி அம்மன் சங்கிலி கருப்பனின் உடன்பிறவா தங்கை.தீயில் மாண்டு தெய்வமாக மாறிய சீலைக்காரி அம்மன் சங்கிலி கருப்பன் பீடத்தில் தஞ்சம் அடைந்தார். இது தான் 21 பந்தி 61 சேனைகள்.61 தெய்வங்கள் மாறாது.21தெய்வங்கள் மாறும்.அவர்களின் தலைமை மாறும். இந்திரன் மருமகன், பன்னிரண்டு கை குறிஞ்சி வேலன், முருகனுக்கு இரட்டை வணக்கம்.....

கொல்லிமலை ஆல் முனி, அண்டம் அடக்க கால் பெருவிரல் மீட்டிய, அகண்ட மேனி, முறுக்கு மீசை பெரியண்ண சாமிக்கு ஐந்தங்க பணி வணக்கம்........

இருகால் குத்திட்டு தலைவாசல் மேல் அமர்ந்த, தேசம் பல கண்ட துறவி, அஷ்டமாசித்து கண்ட சன்னாசி, எங்கள் லாட தன்நாசிக்கு சிரம் மேல் கை தூக்கி கோபுர வணக்கம்........

மாசி மாத உற்சவ பூர்த்தியாள்,  கருணையிலே கரும்பாட்சி, செண்பக மரம் சூழ பண்ணையடிக்கும் எங்கள் ஆச்சி கருணை காமாட்சிக்கு இருகரம் இணைத்து நெஞ்சில் நறுத்தி நிறை வணக்கம்............

வீரபத்ரருக்கும் சண்டிக்கும் பிறந்த தர்ப்பையானவர்,  மலையாளம் தன்னில் பிறந்து; கிழ் நாடு முதல் மேல்நாடு வரை வளர்ந்தவர்,  கம்பீர உருவம், தலைப்பாகை, இடையிலே கச்சை, நெற்றியில் திருமண், தீச்சுடர் கண்கள், முறுக்கு மீசை, கையிலே வீச்சருவாள், தலை வெட்டுண்டு மண்ணில் புதைக்கப்பட்ட எங்கள் கருப்பு எனப் பெயர் கொண்ட கருப்பாயி மணாளன் கருப்பசாமிக்கு முதுகெலும்பு வளைய கருப்பன் சிரசு தொட்டு வணங்குமுடி வணக்கம்...........

 பைரவர் எரித்த வேதங்களில் அஞ்நியில் பிறந்தவன், பதினெட்டாம்படியை காக்கும் காவல் தெய்வம், வீர நாட்டு திருமகன், பஞ்சாய்ப் பறக்கும் குதிரை மேல் கையில் சங்கும் சக்கரமும் ஏந்த, பரிவார தெய்வங்களின் மூத்தவனாய், திருமாலின் காப்பாளனாய், பரிபூரண ஒலிவீசும், அகங்காரம் அழிக்கும் எங்கள் கருப்பண்ணசாமிக்கு இருகை குவித்து நெற்றி நேர் நிறுத்தி நேத்தி செலுத்தும் ஆத்ம வணக்கம்.............

கைலாயத்தில் பிறந்து, ஏழு கன்னிமார் தோட்டத்தில் காவல் காத்து, காதல் கொண்ட பெண்ணின் ஆடை கவர்ந்த காரணத்தால், ஈசன் சாபத்தால், சோழநாடு பிறந்து, சங்கப் பிள்ளை வளர்த்து, பிராமண ஆரியமாலாவை மணமுடிக்க எண்ணி, சோழனால் கழுவேற்றி தெய்வமான ஆரியமாலா சின்னு புடை சூழ அருளும் எங்கள் காத்தவராயனுகக்கு இடக்கால் முட்டியிட வலக்கால் நிற்க இருக்கையும் தலைமேல் தூக்கி சூரிய வணக்கம்......

கொடிச் சுற்றி காசியில் பிறந்தவன், மன்னனுக்கு ஆபத்து என்று கானகத்தில் வீசியதால், சின்னான் செல்லி கண்டெடுத்து வளர்த்தவன், பொம்மியை காவல் காத்து, காதல் கொண்டு சிறை எடுத்தவன், பொம்மு நாயக்கரின்  படைத்தளபதியனாவன், மதுரை கள்ளரை கழுகுக்கு இரையாக்கியவன், நடனக்காரி வெள்ளையம்மாளையும் சிறையெடுத்து, மதுரை மன்னன் தவறாக கழுவேற்றிய எங்கள் கம்பத்தடி வாழ் சூரன் மதுரைவீரனுக்கு  சுருட்டுப் புகை, மது வாடை மனமனக்க உடல் முழுவதும் நிலத்தில் கிடத்தி உருண்டு பிரண்டு அங்கப்பிரதட்சண வணக்கம்..........

நுணா மரத்தடி வாழ்பவள், நான்கு கரை எல்லை காப்பவள், காளியின் உரு கொண்டு, அன்னை பராசக்தியின் கருணை கொண்டு, முசிறி காவேரி கரை வரும் பக்தருக்கு முதலாய் அருள் செய்பவள் எங்கள் ஆதி பிடாரிக்கு நெற்றியால் அவள் பாதம் தொட்டு  அன்பு செறிய பூத்தூவி மலர் வணக்கம்.............


தொடரும்

Tuesday, August 13, 2019

மாநில சுயாட்சி என்பது

இந்தியா சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் முடிவடைந்து 73 ஆம் ஆண்டை அடி எடுத்து வைக்கும் இந்நிலையில் மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவே மத்திய அரசு முயல்கிறது........
 இந்தியாவின் அரசியலமைப்பு, மாநில சுயாட்சிக்கு மதிப்பளித்து, அதிகாரப் பகிர்வு என்பதில் அம்மாநிலம் மக்களுக்கு முன்னுரிமை தரும் அடிப்படை சட்டத்தை இன்னமும் கொண்டிருக்கிறது. இந்தியா மாநிலங்களாக பிரிக்கப் படவில்லை பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா என்ற அமைப்பாகும். அதாவது, பல நாடுகள் ஒன்றிணைந்த அமைப்பு இந்தியா. இந்தியா, ஒரு நாடு அல்ல அது பல தேசம் பல மக்கள் பல கலாச்சாரம் கொண்ட ஒரு துணைக் கண்டம்.  அவர்களின் கலாச்சார ஒற்றுமையை, பண்பாட்டை சீர் குலுங்காமல் மாநிலங்களாக உருப்பெற்றது. மொழிவாரியாக பிரித்ததாக கூட எடுத்துக் கொள்ள முடியாது. அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றிவும் திட்டங்களை வகுத்துக்கொள்ளவும் அம்மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் மூலம் சட்டசபை மூலம் சட்டங்களை இயற்றிவும் திட்டங்களை வகுத்து தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் அவர்களுக்கு என்று அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.  ராணுவப் பாதுகாப்பு, பொருளாதார வலிமை,  போக்குவரத்து துறையின் பாதுகாப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பே மாநில அரசுகள் உருவாகி இருந்தது. அம்மாநில மக்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, மருத்துவம், தொழில் மின்சாரம், தகவல், தொழில்நுட்பம், குடிநீர், பாதாள சாக்கடை, உள்கட்டுமான அமைப்பு, இன்னும் பிறவற்றை அவர்களே உருவாக்கிட செயல்படுத்திட அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் அடிப்படைச் சட்டம் ஆகும். அம்மாநில மக்களுக்கான உரிமைகளில் மிக முக்கியமானது நிலம் எங்கள் உரிமை என்பதாகும். உலகின் எந்த ஒரு பகுதியிலும் நிலத்தின் உரிமையை பொருத்தே அம்மக்கள் தங்களுக்கான உரிமையை மீட்டு எடுக்கின்றனர். அதாவது, தான் பிறந்த சமுதாயத்தில், தான் வளரும் சூழ்நிலையில் தனக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை பெற ஒருவனுக்கு பிறப்பால் உருவாகிறது. உண்ண உணவு, இருக்க இடம், தேவையான கல்வி, முறையான மருத்துவம், தகுதிக்கு ஏற்ப தொழில், தனக்கான பாதுகாப்பு இவற்றையெல்லாம் பெற தன் பிறந்த சமுதாயத்தில் அவன் உழைத்துப் பெற  அம்மாநில அரசு அனைத்தையும் செய்து கொடுக்க முன்வரவேண்டும். இவற்றை மத்திய அரசால் செய்து முடிக்க முடியும் என்பது கனவிலும் நடக்காத ஒன்று. அடிப்படை உரிமைகளைப் பெற மத்திய அரசு மாநில அரசுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் இது மட்டுமே மத்திய அரசின் கடமையாகும். மாநில அரசால் மட்டுமே தன் மக்களுக்குத் தேவையானதை மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியான தரத்தில் தர முடியும். இதையே, இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்கிறது. இதுவே fundamental rights. தனிமனித சுதந்திரத்தின் அடிப்படை உரிமையாகும். இதைத் தடுப்பதற்கு மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ எவ்விதத்திலும் உரிமை கிடையாது என்பதை மனித உரிமை ஆணையம் உறுதி செய்கிறது.
73 ஆம் ஆண்டு சுதந்திர ஆண்டை ஆரம்பிக்கும் இந்தியாவில் காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சுயாட்சிக்கு இருக்கும் அதிகார வரம்பை குறைப்பதற்கான சட்டத்தை  மத்திய அரசு நிறைவேற்றிட முயல்கிறது. தன் அன்றாட வாழ்க்கையில் ஒன்றான வேலைக்குச் செல்லுதல், கல்வி கற்றல், மருத்துவம் பெறுதல், பேச்சுரிமை, எழுத்துரிமை, பார்க்கும் விஷயத்தை பகிர்தல்,  தகவல் உரிமை, நில உரிமை, தனக்கென ஒரு  துறையைத் தேர்ந்தெடுத்தால் என்பன போன்ற உரிமைகளில்  மத்திய அரசு  தலையிடுவதால்  மாநில அரசின் சுயாட்சிக்கு  பங்கம் ஏற்படுகிறது. மாநில அரசுகளின் சுயாட்சிக்கு குறை ஏற்படுத்துவதையோ fundamental rights மீறப்படுவதையோ எந்த ஒரு தனி மனிதனாலும், சமூகத்தின் எந்த ஒரு போராளியாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.  ஏன் என்று தெரியுமா இந்தியாவின் மூத்த குடி தமிழ் குடி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் மாநில சுயாட்சி பங்கம் ஏற்பட்டால் குரல் கொடுக்கும் முதல் குரல் தமிழக மக்களின் குரலாக இருக்கும்.

Fundamental rights it's not a give one
 it is a freedom of birth rights. Anybody's can not stop this...............
குணசேகரன் பெரியசாமி 

Friday, August 9, 2019

Language மொழி

  மொழி
 மொழி என்பது யாதெனில் தன்னுடைய கருத்துக்களை இலகுவாக மற்றவர்களிடம் பகிர வரையப்பட்ட ஓவியத்திற்கு என எழுப்பப்பட்ட ஒலி. ஆதிமனிதன் தன் உணவு தேடலை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அதற்கு தேவையான வசதியான ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு வாழப்பழகிக் கொண்ட காலம் அது. மாறும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பஞ்ச காலங்களை அறிந்து கொண்டான். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி வசந்தமாக இருப்பதை உணர்ந்தான். இதனால் மனிதன் மட்டுமல்லாமல் ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழ இடம்பெயர்தல் அவசியம்  ஏற்பட்டது.  இந்த இடம் பெயர்தலே அவனை பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றது. கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதற்கு  தன்னுடலை உயிரினங்களைப் போல  அவனும் வசப்படுத்திக் கொண்டான். இடம்பெயர்தல் அவனுக்கு மிக முக்கிய ஒன்றாக இருந்தது. உயிர் வாழ்வதற்காக அத்தியாவசிய தேவைகளை பெற இடம் பெயர்தல் அவசியமானது. இடம் பெறும் வழிகளை அவன் மறக்காமல் இருப்பதற்காக சில குறியீடுகளை அவன் விட்டுச் சென்றான். அந்த குறியீடுகள் அந்த இடத்தின் நிலையையும் அவன் செல்லவிருக்கும் இடத்தின் நிலையையும் எதிரொலிப்பது ஆக இருந்தது.  பழங்கால எழுத்து முறையில் இருக்கும் குறியீடுகள் அனைத்தும்  அந்தப் பகுதியின் நில அமைப்பில் ஒத்தோ, காலநிலையை ஒத்தோ திசையை காட்டுவதாகவோ விலங்கு பறவை மீன் போன்ற உயிரினங்களின் குறியீடுகளாகவோ இந்தக் குறியீடுகள் இருந்தன காலப்போக்கில் அவன் தன்னால் முயன்ற வரை சில ஒலிகளை எழுப்பி தன் அடையாளங்களுக்கு சில ஒலி வடிவங்களை கொடுக்கலனான். மனித இனம் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும்போது சங்கேத ஒலிகள் அவனுக்கு மிக முக்கியமானதாக அமைந்தன. சங்கேத ஒலிகள் மூலம் தன் இனத்தை கண்டறியவும் மற்ற உயிரினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் வேட்டையாடுவதற்கும் உணவைப் பெறுவதற்கும் திசைத் அறியவும்  சடங்குகளை உருவாக்கி  இறைவனை வழிபடவும் என இதுவே காலப்போக்கில் மொழியாக உருப்பெற்று இருக்கும் என்பது என் கருத்து.

உரையாடலுக்கு செவியும் பேசும் திறனும் மிக முக்கியமாகிறது. காற்றில்லா பகுதிகளில் பேசினால் மொழி பயணிக்க முடியாத காரணத்தால் அதைக் கேட்பவர் பேசிய சொற்களை கேட்க இயலாது.  மொழிக்கு ஒரு வலிமை இருக்கிறது. தன் கொண்ட கருத்துக்களை ஒருவன் வெளிப்படையாக ஒருவனிடம் பகிரும் போது அந்தக் கருத்துக்கு அவன் ஒப்புக் கொள்ளக்கூடிய அளவு மொழிக்கு வலிமை இருக்கிறது. ஒரு சமுதாயத்தை சார்ந்த கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை பறைசாற்றுவது அந்தச் சமுதாயத்தின் மொழியாகத்தான் இருக்கும். ஒரு கலாச்சாரத்தை பற்றி கற்பவர் அந்த சமுதாயத்தின் மொழியிலேயே கற்க வேண்டியது அவசியமாகிறது. வேறு மொழி மூலம் அந்த சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாட்டை கற்க நினைத்தால் முழுமையாக கற்க இயலாது.
இந்தியா போன்ற பல சமுதாயம் பல கலாச்சாரம் பண்பாடு கொண்ட நாடுகளில் அந்த சமுதாயத்தின் மொழிவழிக் கல்வி அதாவது தாய்மொழி மிகவும் முக்கியமானது உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வியைத் தான் முதலில் புகுவீர்கள் அதன்பின்பு மற்ற மொழிகளில் உங்களின் குழந்தைக்கு பயிற்றுவிப்பீர்கள். சீனா ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் தாய்மொழிக் கல்வியை அவர்கள் புகட்டுகிறார் ஏன் இந்தியாவில் மட்டும் தங்கள் தாய்மொழி கல்வியை விடுத்து பிற மொழிகள் குறிப்பாக ஆங்கிலத்தில் புகட்ட நினைக்கிறார்கள் இதனால் குழந்தைகளின் அறிவுத் திறன் குறைந்து இருக்கிறது கற்கும் திறன் குறைகிறது கற்பிக்கும் திறனும் குறைந்திருக்கிறது இனி ஒரு விதி செய்வோம் தாய்மொழியில் கற்க சபதமேற்போம்
 இப்படிக்கு உங்கள்
குணசேகரன் பெரியசாமி க

மீண்டும் ஒரு பிறப்பு எனக்கு இருந்தால்......

மீண்டும் பிறந்திட வேண்டும்.
 என் தந்தையின்  உயிர் நீர் வழியே என் தாயின் கருவறையில் உட்புகுந்து மீண்டும் பிறந்திட வேண்டும். அன்னையின் மடியில் தவழ்ந்து தந்தையின் நெஞ்சில் நடை பழகி அத்தைமடி சொர்க்கம் என சீராட்டிட இடம் வேண்டும். மழலைமொழி பேசிட வேண்டும். குற்றமில்லா குறும்புகளை உறவுகளிடம் தினம் தினம் நிகழ்த்த வேண்டும். அக்கா அண்ணனிடம் போலிச் சண்டையிட வேண்டும் .பள்ளிப் பயிலவேண்டும். நண்பர்களுடன் விளையாட வேண்டும். ரத்தமின்றி சத்தமில்லா யுத்தங்களை நண்பர்களிடம் நிகழ்த்திட வேண்டும். எனக்குப் பிடித்த இயந்திரவியல் துறையில் கல்லூரிப் பயில வேண்டும். கல்லூரி நண்பர்களுடன் உறவாட வேண்டும். வெல்ல  முடியா எதிரிகள் வேண்டும். கைப்பிடித்த மனையாள் உடன் மீண்டும் திருமணம் வேண்டும். எனக்குப் பிறந்த அதே குழந்தை மீண்டும் பிறந்திட வேண்டும். நல்த் தொழில் பயிலவேண்டும். வெற்றியடைய வேண்டும். பணம் இல்லா வாழ்வு வேண்டும். நோயில்லா வாழ்வு வேண்டும். துன்பமில்லா சிரிப்பு வேண்டும். தமிழுக்குப் பெருமை வேண்டும். நான் கொண்டு வெள்ளாளச் சமுதாயம் உயர வேண்டும். கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடி தமிழ் குடி என்று உலகம் ஏற்க வேண்டும். உலகின் மொழி தமிழாக வேண்டும். அன்பு  நிறைய வேண்டும். பண்பு பெருக வேண்டும். அறம் மீறா வாழ்வு வேண்டும்.  இன்னும் பல இருப்பினும் மீண்டும் அன்னை கருவறையில் பிறந்திட வேண்டும். நான் வாழ்ந்த அதே வாழ்வில் மீண்டும் வாழ்ந்திட வேண்டும்.......
 நான்  பிறந்த இந்த நாளில் இவற்றையெல்லாம் எனக்கு மீட்டுத் தருவாயா என் குலதெய்வம் அழகுநாச்சியம்மனே.........
இப்படிக்கு உங்கள் குணசேகரன் பெரியசாமி

Thursday, August 8, 2019

பூக்களை பறிக்காதீர்கள்

பனி நனைந்த மொட்டொன்று பருவமிட்டு
இதழ் விரிக்க காத்திருந்தது. செவ்விதழ் கரங்களை விரித்து உதயமாகியது காலை கதிரவன். மொட்டு மெல்லத் திறக்கும் காமநீராம் தேனை பருக தேனீக்கள் காத்திருந்தன. பூச்சிகள் வண்ணங்களை சூடி உறிஞ்சு குழல் களோடு காத்திருந்தன. வண்டுகள் மகரந்தம் சூடி உடம்பு முழுவதும் அள்ளிப் பூசிக் கொண்டு இன்பத்திலே நனைந்து பூவோடு வாழ காத்திருந்தன. தேனீக்கள் வண்ணத்துப்பூச்சிகள் வண்டுகள் இவை மூன்றுக்குமான போட்டி யார் அள்ளுவது யார் உறிஞ்சுவது யார் பூசிக்கொள்வது என்கிற போட்டி மும்முனைப் போட்டி. இவற்றை எதையும் சட்டை செய்யாமல் ஒரு கத்தி கொண்டு வெட்டப்பட்டது அந்தப் பூ. வெட்டிய பூவை தோட்டக்காரன் கடைவீதியில் விற்க பங்கு போட்டு வைத்தான் மற்ற பூவோடு.  ஒருவன் கடவுளுக்கு வாங்கிச் செல்கிறான் ஒருவன் சமாதிக்கு வாங்கிச் செல்கிறான் ஒருவன் காதலிக்கு வாங்கி செல்கிறான் என்கிற பலதரப்பட்ட மக்களின் வாங்கு பொருளாகவே இருக்கிறது பூ. பூ ஒரு இயற்கையின் கொடை. தன்னைத்தானே காத்துக் கொள்வதற்காக தனக்கானதை பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் தந்து, தன்னை உயிர் வாழ வைத்துக் கொள்கிறது. இது ஒரு உணவுச்சங்கிலி. இயற்கையின் சுழற்சி முறை.  கடையில் வைக்கும் ஒவ்வொரு பூவிலும்  தேனீகளின் வாழ்வும் வண்டுகளின் வாழ்வும் சூறையாடப்படுகின்றன. இயற்கையின் ஆயுள் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன..........

பூக்கள் தான் பறிக்காதீங்க
வண்டுகளின் காதலை முறிக்காதீங்க.......

இப்படிக்கு உங்கள் குணசேகரன் பெரியசாமி