இருவரும் கைகளை கோர்த்தவாறு, அனைத்து கொண்டு தூங்கி போனார்கள். சில குற்றங்களுக்கு தண்டனை வேறு விதமாக இருக்க வேண்டும். அதாவது தற்காப்பிற்காக, திட்டமிடாத குற்றங்களுக்கு தண்டனை தர கூடாது. அதுவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு அவர்களே தண்டனை தர வேண்டும்.
மறுநாள் அதிகாலை பொழுது விடிந்து சூரியன் ஒளியை வீசியதுமே, எழுந்தான் தங்கையன். வீட்டுக்கு உள்ளே சென்றவனுக்கு ஓரே அதிர்ச்சி. சூரி கத்தி இடையில் குத்தி, இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தான் வீரபாண்டி மில் மைனர். சூரி கத்தி அவனுடையது. தடியை எடுத்து அசைத்து பார்த்தான் தங்கையன். உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மல்லாந்து படுக்க வைத்து கத்தியை எடுத்தான். அதை ஒரு பையில் போட்டு வீட்டின் கூரையில் ஒளித்து வைத்தான். வீட்டின் கொல்லையில் குழி தோண்டி புதைத்தான். தானே வீர பாண்டியை கொன்றதாக எண்ணி , கொலையையும் மறைத்தான். வள்ளியும் பிரணிகாவும் காணாததை கண்டு, வீரபாண்டினுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக இருவரும் எங்கோ ஓடி மறைந்து கொண்டனார் என எண்ணினான், அவர்களை தேடினான். அவர்கள் இருவருக்கும் கொலை பற்றி தெரியாது என இருந்தான்.
பச்சை வாழியம்மன், அம்மாவின் குல தெய்வம். இங்கே வள்ளியுடன் பலமுறை வந்து இருக்கிறாள் பிரணிகா. அதுவும் அந்த பொட்டத்துத்தி புதர், மஞ்சள் பூ, அதன் விசிறி காய்கள் என இருவருக்கும் பிடித்தமான ஒன்று. கோவில்கள் ஊருக்கு கிழக்கே தான் இருக்க வேண்டும் எனும் கிராமிய விதிக்கு உட்பட்ட கோவில் அது. 21 பந்தி தெய்வங்கள் 63 சேனை தெய்வங்கள் என பச்சை வாழியம்மன் மிகவும் பெயர் பெற்ற தெய்வம். அந்த கோவிலில் யாரும் படுக்கக் கூடாது, அழக்கூடாது, ஆடு வெட்டலாம், கோழி வெட்ட கூடாது, பூசாரிகள் இல்லாமல் சாமி கும்பிடக் கூடாது, பெண்கள் வரக்கூடாது என சொல்லி முடிக்க முடியாத கட்டளைகள். ஆனால் பராமரிக்கத்தான் ஆளில்லை. வண்ணப்பூச்சு இல்லாத, பசி படர்ந்து, வெயிலில் காய்ந்து, கவனிக்க ஆள் இல்லாத சிலையாக பச்சை வாழியம்மன் இருந்தாள். தமிழ்நாட்டின் குலதெய்வத்துக்கு இது தான் இன்றைய நிலவரம்.
மறுநாள் அதிகாலை பொழுது விடிந்து சூரியன் ஒளியை வீசியதுமே, எழுந்தான் தங்கையன். வீட்டுக்கு உள்ளே சென்றவனுக்கு ஓரே அதிர்ச்சி. சூரி கத்தி இடையில் குத்தி, இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தான் வீரபாண்டி மில் மைனர். சூரி கத்தி அவனுடையது. தடியை எடுத்து அசைத்து பார்த்தான் தங்கையன். உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மல்லாந்து படுக்க வைத்து கத்தியை எடுத்தான். அதை ஒரு பையில் போட்டு வீட்டின் கூரையில் ஒளித்து வைத்தான். வீட்டின் கொல்லையில் குழி தோண்டி புதைத்தான். தானே வீர பாண்டியை கொன்றதாக எண்ணி , கொலையையும் மறைத்தான். வள்ளியும் பிரணிகாவும் காணாததை கண்டு, வீரபாண்டினுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக இருவரும் எங்கோ ஓடி மறைந்து கொண்டனார் என எண்ணினான், அவர்களை தேடினான். அவர்கள் இருவருக்கும் கொலை பற்றி தெரியாது என இருந்தான்.
பச்சை வாழியம்மன், அம்மாவின் குல தெய்வம். இங்கே வள்ளியுடன் பலமுறை வந்து இருக்கிறாள் பிரணிகா. அதுவும் அந்த பொட்டத்துத்தி புதர், மஞ்சள் பூ, அதன் விசிறி காய்கள் என இருவருக்கும் பிடித்தமான ஒன்று. கோவில்கள் ஊருக்கு கிழக்கே தான் இருக்க வேண்டும் எனும் கிராமிய விதிக்கு உட்பட்ட கோவில் அது. 21 பந்தி தெய்வங்கள் 63 சேனை தெய்வங்கள் என பச்சை வாழியம்மன் மிகவும் பெயர் பெற்ற தெய்வம். அந்த கோவிலில் யாரும் படுக்கக் கூடாது, அழக்கூடாது, ஆடு வெட்டலாம், கோழி வெட்ட கூடாது, பூசாரிகள் இல்லாமல் சாமி கும்பிடக் கூடாது, பெண்கள் வரக்கூடாது என சொல்லி முடிக்க முடியாத கட்டளைகள். ஆனால் பராமரிக்கத்தான் ஆளில்லை. வண்ணப்பூச்சு இல்லாத, பசி படர்ந்து, வெயிலில் காய்ந்து, கவனிக்க ஆள் இல்லாத சிலையாக பச்சை வாழியம்மன் இருந்தாள். தமிழ்நாட்டின் குலதெய்வத்துக்கு இது தான் இன்றைய நிலவரம்.
பொட்டத்துத்தி புதரில் இருந்த பிரணிகா தூங்கி கொண்டு இருந்தாள். காவல்துறை வாகனம் புழுதி பறக்க வருகிறது. அப்பொழுது, புதரில் இருந்த, பிரணிகா தரதரவென்று இழுத்து, காவல் துறை அதிகாரி ஒருவர் வண்டியில் ஏற்றுகிறார். வண்டி மீண்டும் திரும்பி வேகம் எடுத்து செல்கிறது. அப்போது, புதிரின் ஓரத்தில் இருந்து வள்ளி வேடிக்கை பார்க்கிறாள். பிரணிகாவின் இத்தகைய கனவை கலைத்து பிரணிகாவை எழுப்பினாள் வள்ளி. எழுந்த வேகத்தில் பயந்து போனாள் .
"அக்கா நான் தான் அக்கா வள்ளி...........பயப்படாத...." என்றாக வள்ளி.
பிரணிகாவுக்கு மேல் மூச்சு, கீழ் முச்சு வாங்கியது. தாங்க முடியாத வயிறு வலி வந்தது. உடல் வேர்த்து கலகலத்து போனாள். தலை சுற்று வேறு. வயிற்றில் இருகையும் வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டு குத்தவைத்தாள். ஆடை முழுவதும் இரத்தம். வள்ளி ஒன்றும் புரியதவலாய் "அக்கா என்ன ஆச்சு " என்றாள் பிரணிகாவிடம். வள்ளி புதரின் வெளியே பார்த்தாள். அங்கே ஒருவர் வருவதை கண்டு " அண்ணே இங்க வாங்க அக்காவுக்கு வயிறு வலிக்குதாம்" என்று கத்தினாள். அவர் யார் என்றால் கோயிலில் குறி சொல்லும் பொன்மணத்தான் கோடாங்கி. கோடாங்கி துத்தி செடியை விளக்கி பார்த்தான். அங்கே பிரணிகா குத்தவைத்து வயிறை பிடித்திருந்தாள். கோடாங்கி அவள் பின்னே பார்த்ததும் புரிந்து கொண்டார். அப்போது, தங்கையனும் அங்கு வந்து சேர்ந்தான். நடந்த விவரத்தை தங்கையனிடம் கூறி மாட்டு வண்டியை எடுத்துவரச் சொன்னான்.